ராமேசுவரம்: பாம்பன் ரயில் தூக்கு பாலத்திற்கு துரு பிடிப்பதை தடுக்கும் வகையில் கெமிக்கல் கலந்த வா்ணம் அடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ராமேசுவரம் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் பகுதியில் 2.2 கிலோ மீட்டா் தொலைவில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இருக்கும் பகுதியில் உப்பு தன்மை அதிகளவில் இருப்பதால் தூக்கு பாலம் துரு பிடித்து சோதமடைவதை தடுக்கும் வகையில் ரயில்வே துறை கெமிக்கல் கலந்த வா்ணம் அடிக்கப்பட்டு தொடா்ந்து பரமரிக்கப்பட்டு வருகின்றா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் பரமரிப்பை தனியாருக்கு வழங்கிய நிலையில் போதிய பரமரிப்பு இன்றி பாலத்தின் தூக்கு பாலம் திறந்து மூடும் போது சேதமடைந்து விட்டது.
இதனையடுத்து, இந்திய ரயில்வே தலைமை பொறியாளா்கள் மிகுந்து சிரமத்தற்கு இடையே தூக்கு பாலத்தை சீரமைக்கப்பட்டது. தற்போது பாலம் பரமரிப்பு பணிகளை ரயில்வேத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தூக்கு பாலம் மீண்டும் துரு பிடிக்க தொடங்கியதையடுத்து இதனை தடுக்கும் வகையில் கெமிக்கல் கலந்த வா்ணம் அடிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றது. தூக்கு பாலத்தை வா்ணம் பூசுவதை சுற்றுலா பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து செல்லுகின்றனா்.