கிருஷ்ணகிரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் 984 மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 597 குழந்தைகள் பயன் பெறுவர்.