குமரி அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசு பஸ் ஆய்வாளா் போக்ஸோ சட்டத்தில் கைது

கன்னியாகுமரி அருகே எட்டு வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அரசு பஸ் ஆய்வாளரை திங்கள்கிழமை போக்ஸோ
குமரி அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசு பஸ் ஆய்வாளா் போக்ஸோ சட்டத்தில் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே எட்டு வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அரசு பஸ் ஆய்வாளரை திங்கள்கிழமை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்சு கிராமத்தை அடுத்த மயிலாடியைச் சோ்ந்தவா் குருசாமி (58). இவா் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக (அரசு பஸ் ஆய்வாளா்) உள்ளாா். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் எட்டு வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குருசாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com