திருவாரூர்: விளைவித்த பருத்தியை இந்திய பருத்தி கழகம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பருத்தியுடன் விவசாய சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைவித்த பருத்தியை இந்திய பருத்தி கழகம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், நாகை மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு தலைமையில் விளைவித்த பருத்தியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.