சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார்.
துத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஏற்கெனவே தொடர்புடைய காவலர்களை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொள்வோம். அதில் புதிய தகவல்கள் கிடைத்து தொடர்புடையவர்கள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை நடந்து கொண்டிருப்பதால் உடனே இறுதி முடிவுக்கு வர முடியாது. சிறிது காலம் ஆகும்.
கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.