கரோனா: 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடைவிதித்துள்ளதை அடுத்து 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, துறைமுகங்களிலேயே படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதிக்கப்பட்டதால் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதிக்கப்பட்டதால் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.


ராமேசுவரம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 5-ஆம் தேதி முழு ஊரடங்கு காரணமாக ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடைவிதித்துள்ளதை அடுத்து 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, துறைமுகங்களிலேயே படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்,மண்டபம் மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று விட்டு ஞாயிற்றுகிழமை கரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com