விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரத்தில் உள்ள துணிக்கடையில் சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரத்தில் உள்ள துணிக்கடையில் சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் பகுதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடை பட்டுப்புடவை விற்பனைக் கடை என்பதால் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமானதாக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.