ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 36 மி.மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில்: ஈரோடு-25, பெருந்துறை-36, கோபி-6.2, தாளவாடி-5, சத்தி-4, பவானிசாகர்-1.2, பவானி-21.2, கொடுமுடி-3.6, நம்பியூர்-11, சென்னிமலை-11, மொடக்குறிச்சி-35, கவுந்தப்பாடி-23.6, எலந்தகுட்டை மேடு-25, அம்மாபேட்டை-17.4, குண்டேரிப்பள்ளம்-7.4, வரட்டுப்பள்ளம்-9.4 என மாவட்டம் முழுக்க 242 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.