புதுச்சேரி. புதுச்சேரியில் புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 804 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 485 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்திராகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உய்ந்துள்ளது. இதுவரை 405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்தார்.