திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 142 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், 58 பெண்கள், 8 குழந்தைகள், 6 சுகாதார பணியாளர்கள் உட்பட 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,496-ஆக உயா்ந்தது.