பாபநாசத்தில் 10 மி.மீ. மழை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணை கோப்பு படம்
பாபநாசம் அணை கோப்பு படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே சாரல் மழை பெய்யத் தொடங்கிவிடும். ஜூலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். ஆனால், நிகழாண்டில் பருவமழை தாமதாகி வருகிறது. அதனால் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படாமல் உள்ளது. 

வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் கார் பருவ சாகுபடியைத் தொடங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சனிக்கிழமை பகலில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் காணப்பட்டது. இரவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

சேர்வலாறு-2 மி.மீ., மணிமுத்தாறு-1, பாளையங்கோட்டை-2.2, தென்காசி-6.4, செங்கோட்டை-5, ஆய்க்குடி-3.4, கருப்பாநதி-2, குண்டாறு-10 மழை பதிவாகியுள்ளது. 

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் ஞாயிற்றுக்கிழமை நீர்மட்ட விவரம். பாபநாசம்-51.20 அடி, சேர்வலாறு-82, மணிமுத்தாறு-66.10, வடக்குபச்சையாறு-10.25, நம்பியாறு-10.82, கொடுமுடியாறு-14.25, (தென்காசி மாவட்டம்) கடனாநதி-36.30, ராமநதி-49.75, கருப்பாநதி-24.94, குண்டாறு-28.62, அடவிநயினார்-66.75.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com