கிள்ளியூர்: சாலையை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரஸார் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுத்தி வெள்ளிக்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரஸார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய காங்கிரஸார்.
கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய காங்கிரஸார்.

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுத்தி வெள்ளிக்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரஸார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கிள்ளியூர் பேரூராட்சிக்குள் பட்ட வெள்ளையம் பலம் ஆர்.சி கோயில் முதல் பிலாக்க விளை வரை நகர்புற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்க ரூ.79 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019 -ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. பின்பு கடந்த ஜனவரி மாதம் இச் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது சாலையில் உள்ள ஜல்லியை மட்டும் ஜெ.சி.பி இந்திரம் மூலம் பெயர்த்தனர். பின்பு கரோனா பொது  முடக்கம்  காரணமாக அப்பணியை செய்யாமல் கிடப்பில் போட்டனர். இதனால் இச்சாலையில் இரு சக்கர வாகனங்ள் உள்ள்ட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும்  போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்டது. மேலும் , பேருராட்சிக்குள்பட்ட பல சாலைகள் டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கவில்லை,

எனவே, இச்சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தும்  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பணி தொடங்க இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் தலைமையில் கிள்ளியூர் பேருராட்சி அலுவலத்தில் திடீரென காங்கிரஸர்  உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஏசு ராஜ் எம்.எல்.ஏ-யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இதில், கிள்ளியூர் லட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்குரைஞர் பால்மணி, கிள்ளியூர் பேரூர் காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் கிளைமென்ட், ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com