சாத்தான்குளம்: தந்தை மகன் கொலை தொடர்பாக தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் மனித உரிமை ஆணைய துணை கண்காணிப்பாளர் இன்று விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மருத்துவ சான்று அளித்த டாக்டர் வினிலா, டாக்டர் வெங்கடேஷ், கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், சாத்தான்குளம் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.