பொதுமுடக்கம்: வெறிச்சோடியது தூத்துக்குடி மாவட்டம்
By DIN | Published On : 19th July 2020 11:20 AM | Last Updated : 19th July 2020 11:20 AM | அ+அ அ- |

வெறிச்சோடிய சாலைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது.
தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் படி தமிழகம் முழுவதும் ஜூலை மாத 3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கடைகள் மற்றும் தினசரி சந்தைகள், மீன் மார்கெட், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G