சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. காவலர்கள் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வந்த 3 காவலர்களுக்கு சி.பி.ஐ. காவல் நாளை வரை உள்ள நிலையில் இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 காவலர்களுக்கும் ஆகஸ்ட் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.