சீர்காழி: மாற்று கட்சிகளிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் 

சீர்காழியில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
மாற்று கட்சிகளிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள்
மாற்று கட்சிகளிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள்

சீர்காழியில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
 
நாகை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காப்பியக்குடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து விலகி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட தலைவருமான ராஜ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சமூக இடைவெளியை பின்பற்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட தலைவர் ராஜ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். 

இதில் மாவட்ட வழக்குரைறிஞர் பிரிவு தலைவர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், சீர்காழி கிழக்கு வட்டாரத் தலைவர் பாலகுரு ,மேற்கு வட்டாரத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் தென்னரசு, மாநில மகளிர் அணி செயலாளர் காந்திமதி, மாவட்ட பொருளாளர் சிவராமன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com