தற்போதைய செய்திகள்
காரைக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஹெச். ராஜா பங்கேற்பு
காரைக்குடியில் இயற்கையை வளர்க்கும் விதமாக நூறு மரக்கன்றுகள் நடும் விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்று மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
காரைக்குடியில் இயற்கையை வளர்க்கும் விதமாக நூறு மரக்கன்றுகள் நடும் விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்று மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரம் 7-வது வீதியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சார்பில் சுற்றுச்சூழல் நலன் கருதியும், இயற்கையை பேணவும் நூறு மக்கன்றுகள் அப்பகுதி சாலையோரங்களில் வியாழக்கிழமை நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தலைமை வகித்து மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களும், பாஜகவினரும் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் எஸ்வி. நாராயணன், மாவட்டச் செயலாளர் ஏ. நாகராஜன், காரைக்குடி நகரத் தலைவர் கே. சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.