சீர்காழி: சீர்காழியில் மாவட்ட வருவாய் கோட்டம், மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட வேண்டும் என சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மயிலாடுதுறை சிறப்பு அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு சிறப்பு அதிகாரிகள்,மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் எல்லை வரையறை பணிகள்,வருவாய்க வட்டம் பிரிப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீர்காழியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள், விவசாயிகள்,மீனவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளதை சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில், முன்னாள் எம் எல் ஏ ஜெகவீரபாண்டியன் முன்னிலையில், துணை தலைவர் கோவி.நடராஜன் , நிர்வாகிகள் ஹரக்சந்த் , முத்து கருப்பன் ,கோட்டங்குடி .சங்கர் , காமராஜ் , அன்பு உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரி லலிதாவை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயம் , மீன்வளம் மூலம் பல்வேறு லாபம் ஈட்டும் தொழில்கள் சிறப்புகள் கொண்ட சீர்காழியில் வருவாய் கோட்டாசியர் அலுவலகம் அமைத்திடவேண்டும், கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அறிவிக்கவேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி,மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இவற்றில் ஏதேனும் ஒன்றை சீர்காழியில் அமைத்திடவேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தனர்.