சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் முத்துராஜா, தாமஸ் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஜ தரப்பில் வழக்குரைஞர் வாதிடுகையில், இந்த வழக்கில் கைதானவர்களை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இவர்களை ஜாமீனில் செல்ல அனுமதித்தால், சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவலர்கள் முத்துராஜா, தாமஸ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.