திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வீரராகவர் திருக்கோயிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்.
நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் திருக்கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவர் கோயில் வளாகத்தில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் சார்பில் அவரது மகள் மகாலட்சுமி கோயிலில் உள்ள 120 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் ரூ.500 ரொக்கம் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், அதிமுக நிர்வாகிகள் கிரண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.