சீர்காழியில் விவசாயி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வைத்து மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழியில் விவசாய சங்கம் சார்பில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே, அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்தச்சட்டம் 2020, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம் 2020, விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020, அவசரச் சட்டங்களின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் பெ.வீரராஜ், ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வரதராஜன், கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் நீதிசோழன், வி.ச.ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன், இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் மா.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.