திருச்சி புத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடடத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை மற்றும் லேப், ரத்த வங்கி உள்ளிட்டவை மூடி சீல் வைக்க உத்தரவு.
இந்த மருத்துவனையின் பரிசோதனை மையத்தில், முடிவுகள் தவறாகவும், குறிப்பாக கரோனா சோதனையில் நெகட்டிவ்-க்கு, பாசிட்டிவ் என வருவதாகவும், அவ்வாறு வரும் நபர்களை அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில், மாவட்ட, மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நோயாளிகளை அப்புறப்படுத்தி லேப், மருத்துவமனை என பகுதி பகுதியாக பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.