சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டாய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய பொறியாளர் உள்பட 9 பேருக்கு காரோனோ பெற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.