திருப்பூரில் சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு

திருப்பூரில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நின்று கொண்டிருந்த மின் விளக்குகளைப் பழுதுபார்க்கும் லாரி மீது மோதிய இரு சக்கர வாகனம்
நின்று கொண்டிருந்த மின் விளக்குகளைப் பழுதுபார்க்கும் லாரி மீது மோதிய இரு சக்கர வாகனம்

திருப்பூர்: திருப்பூரில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை அருகே மின் விளக்குகளைப் பழுதுபார்க்கும் லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் இரு சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் திருப்பூர், குண்ணங்கல் பகுதியைச்சேர்ந்த கரண்(20), பெரியதோட்டத்தைத் சேர்ந்த கரீம்(20) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com