புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 48,513 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 34,193 -ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,513 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 768 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 34,193-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய்த்தொற்றுக்காக 5,09,447 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,88,029 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 28- ஆம் தேதி வரை 1,77,43,740 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 4,08,855 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு: 15,31,669
பலி: 34,193
குணமடைந்தோர்: 9,88,029
சிகிச்சை பெற்று வருவோா்: 5,09,447