தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் வியாழக்கிழமை காலை உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், மாவட்டத்தில் 316 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
மேலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,124 ஆக உயர்ந்துள்ளது. 2,429 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்கள் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது உடல்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளின் படி அடக்கம் செய்யப்பட உள்ளது.