மேற்குவங்கம் மிட்னாபூரில் 600 கிலோ எடையுள்ள ஒரு மீனை ரூ. 50 ஆயிரம் விலைக்கு மீனவர் விற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
இது குறித்து மீன் விற்பனையாளர் சங்க தலைவர் நபகுமார் பைரா கூறுகையில்,
மேற்கு வங்கத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒடிசாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் திகா கடற்கரைக்கு 600 கிலோ எடையுள்ள 'சில்சங்கர்' (ஜெயண்ட் டெவில் ரே) வகையைச் சார்ந்த மீன் ஒன்றை பிடித்து வந்தார்.
அந்த மீனை திகா மோகனா மீன் சந்தைக்கு கொண்டு சென்று ரணகட் பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 50 ஆயிரம் விலைக்கு விற்றார் என பைரா கூறினார்.