திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தணிக்கையாளர் வேலுமணி தலைமை வகித்தார்.சாலை ஆய்வாளர் சங்கத்தின் பொதுச்செயலர் குருசாமி சங்கத்தின் கோட்டத் தலைவர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,சாலை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.