ஒடிசாவில் இன்று புதிதாக 1,499 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்தியில்,
இன்று புதிதாக 1,499 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 31,877 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 878 பேர் மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்த மீண்டவர்களின் எண்ணிக்கை 19,746 ஆக அதிகரித்துள்ளது.