செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம்: ரஜினிகாந்த் பாராட்டு

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம்: ரஜினிகாந்த் பாராட்டு


சென்னை: சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பேராசிரியர் சந்திரசேகரனை இயக்குநராக நியமித்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com