வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள்!

மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது பிரசாதம், புனித தீர்த்தம் அளிக்கக் கூடாது என்பது உள்பட கடைபிடிக்க வேண்டிய பல புதிய வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டு உள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள்!


மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது பிரசாதம், புனித தீர்த்தம் அளிக்கக் கூடாது என்பது உள்பட கடைபிடிக்க வேண்டிய பல புதிய வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டு உள்ளது.

நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் ஐந்தாம் கட்டமாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் , வரும் 8 ஆம் தேதி முதல் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

* வழிபாட்டு நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும்.

* வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.

* வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.

* அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

* சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

* அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

* பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.

* ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

* வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.

* பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.

* கரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.

*அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். 

* சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.

* வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

* வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.

* முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.

* வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.

* கழிவறைகள், கை - கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com