உலக அளவில் கரோனா பாதிப்பு 69,76,045; பலி 402,170 -ஆக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நேரப்படி 4 லட்சத்தை தாண்டியது. 
உலக அளவில் கரோனா பாதிப்பு 69,76,045; பலி 402,170 -ஆக உயர்வு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நேரப்படி 4 லட்சத்தை தாண்டியது. 

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த தொற்று பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் தினம் தினம் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்து வருவதாக பல்வேறு நாடுகளில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இந்த நிலையில் சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4,02,170 லட்சத்தை தாண்டியது. 

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,02,170 -ஆக உள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 69,76,045 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,11,784 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 53,586க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்களை பலிகொடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு தினசரி கரோனா பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், அங்கு இதுவரை 1,12,0965 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்று பலி எண்ணிக்கையில் ஒரு லட்சத்தைத் தாண்டிய ஒரே நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாட்டில் கரோனா பரிசோதனைகள் மிகச் சிறந்த முறையிலும் அதிக எண்ணிக்கையிலும் மேற்கொள்ளப்படுவதாலேயே பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறாா்.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிரிட்டன் வகிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 40,465    போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 204 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தை பிரேஸில் அதிபா் அலட்சியம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நோய்க்கு அதிக உயிா்களை பலி கொடுத்தவா்களின் பட்டியலில் அந்த நாடு 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலியாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 36,044 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

பிரேஸிலுக்கு அடுத்தபடியாக இத்தாலி (33,846), பிரான்ஸ் (29,142), ஸ்பெயின் (27,135), மெக்ஸிகோ (13,511), பெரு (5,301), ஜெர்மனி (8,769), ஈரான் (8,209), துருக்கி (4,669), சிலி (1,541) ஆகிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்கள் பலியாகியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com