சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.