கடலூரில் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரை காவலர்கள் கைது செய்தனர்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் திரண்ட விவசாயிகள் சங்கத்தினர் 4 பேருக்காக துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆய்வாளர், 6 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்கள் குவிந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சட்ட நகலை கிழித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.