விழுப்புரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு இளைஞர் பலி

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6 -ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். காய்ச்சல் ஏற்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com