விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 6 -ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். காய்ச்சல் ஏற்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.