விழுப்புரம் மாவட்டத்தில் 505 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
செஞ்சி அருகே நயம்பாடியைச் சேர்ந்த 53 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.