செங்கல்பட்டிலிருந்து  வைகுந்தம் வந்த இருவருக்கு கரோனா

செங்கல்பட்டிலிருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்திற்கு வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப
செங்கல்பட்டிலிருந்து  வைகுந்தம் வந்த இருவருக்கு கரோனா


சங்ககிரி: செங்கல்பட்டிலிருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்திற்கு வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே உள்ளவெள்ளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுள்ள இளைஞர் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவரும் சென்னை, செங்கல்பட்டிலிருந்து வியாழக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். இருவருக்கும் தொற்று உறுதியானதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சனிக்கிழமை சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com