முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த சில நாள்களாக சென்னையைத் தவிர, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் சமூகப் பரவலாக நோய்த்தொற்று உருவெடுக்கக் கூடிய நிலை எழுந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு ஊடங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.