சென்னை மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 52 வயதான துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது மனைவி மற்றும் மகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாதவரம் தாலுகா அலுவலகத்தில் 38 வயதான கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.