வால்பாறை: கோட்டூர் காவல் நிலையம் சீல் வைப்பு

வால்பாறை உட் கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
வால்பாறை: கோட்டூர் காவல் நிலையம் சீல் வைப்பு


பொள்ளாச்சி: வால்பாறை உட் கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், பெண் காவலர் ஒருவருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து புதன்கிழமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா, வட்டாட்சியர் வெங்கடாச்சலம், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆனைமலை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து கிருமிநாசினிகள் தெளித்து சீல் வைத்தனர். அங்கு பணிபுரியும் 40 காவலர்களும் கரோனா பரிசோதனை செய்யவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com