திருவாரூர்: சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணையின்போது தந்தை, மகன் மரணமடைந்த சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையின் விசாரணையின்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்தை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வர்த்தக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக
முழக்கங்களை எழுப்பினர்.
இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பென்னிக்ஸின் 3 சகோதரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் வர்த்தக சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.