புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 533-ஆக உயா்ந்தது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரேநாளில் 31 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தின் கடலூா், சிதம்பரம் பகுதிகளில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரியைச் சோ்ந்த இருவரும் புதுவை மாநிலப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 533-ஆக உயா்ந்துள்ளது. 11 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். குணமடைந்தோரின் எண்ணிக்கை 187-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.