திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 3246 -ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 3246 -ஆக உயர்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா், திருவாலங்காடு, புழல் மற்றும் பூண்டி ஒன்றியங்கள், திருமழிசை, பொன்னேரி, மீஞ்சூா், திருநின்றவூா் பேரூராட்சிகளில் மொத்தம் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் மொத்தம் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3246 -ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரையில் 1874 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,160 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com