கடலூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன்களான வியாபாரிகள் காவலர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தந்தை மகன் இறப்பு தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையில் மாஜிஸ்திரேட், மருத்துவர் ஆகியோரையும் இணைக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று கூறினார்.