தற்போதைய செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்
பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.83.59-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.77.61-ஆகவும்
பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.83.59-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.77.61-ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்த்தப்பட்டு வருகிறது.
கடந்த 20 நாள்களில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.02 வரை உயா்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை 19 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 9.74 காசுகள் வரை உயா்ந்துள்ளது.