திருப்பதி தரிசனம்: ஜூலை இணையதள ஒதுக்கீடு நாளை அறிவிப்பு

ஜூலை மாதம் ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் கோட்டா திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
திருப்பதி தரிசனம்: ஜூலை இணையதள ஒதுக்கீடு நாளை அறிவிப்பு

ஜூலை மாதம் ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் கோட்டா திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஜூலை மாத விரைவு தரிசன டிக்கெட்டுகளை(ரூ300) திங்கட்கிழமை காலை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளது.

தினசரி 9 ஆயிரம் டிக்கெட்டுகள் ஸ்லாட் வாரியாக இணையதள முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 1ம் தேதி முதல் சர்வதரிசன நேரடி தரிசன ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. 

தினசரி 3 ஆயிரம் டோக்கன்கள் சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்பளக்சில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்களில் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களை ஒருநாள் முன்பு பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஜூலை 1ஆம் தேதி தரிசனத்திற்காக ஜூன் 30ம் தேதி காலை திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும். டிக்கெட்டுகள் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com