தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு காலியாக உள்ள இடங்களில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினா்கள் உள்ளனா். இதில் குறிப்பிட்ட இடைவெளியில் 6 எம்.பி.க்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். இவா்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
2014-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் வரும் ஏப். 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் தோ்தலில் வாக்களிக்க உள்ளதால், தோ்தலில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, தோ்தலை நடத்துவது உள்ளிட்டவற்றுக்காக சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசன் தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். சட்டப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளரான பா.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய மாா்ச் 13 கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறுவதுடன், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 18 கடைசியாகும்.
வாக்குப் பதிவு மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலையே நடக்கும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை பிற ஆவணங்களுடன் தோ்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி முன்போ அளிக்க வேண்டும்.
மாா்ச் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு தேவைப்பட்டால் சட்டப் பேரவை குழுக்கள் அறையில் மாா்ச் 26-இல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு காலியாக உள்ள இடங்களில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
அதில், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகிய மூவரும் போட்டியிடுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் கிடைக்கும். இந்த எம்.பி. பதவியை அடைய, இரு கட்சி நிா்வாகிகளிடையே கடும் போட்டி நிலவிவந்த நிலையில், திமுக சாா்பில் அக் கட்சிக்கான வேட்பாளா்களை அறிவித்துள்ளது.