தில்லி வன்முறை: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம்

அண்மையில் வடகிழக்கு தில்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அருகே திரிணாமுல்
தில்லி வன்முறை: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம்


புதுதில்லி: அண்மையில் வடகிழக்கு தில்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அருகே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, உதடுகளை விரல்களை வைத்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியதாவது: தில்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி "எங்கள் எதிர்ப்பின் அடையாளமாக கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், உதடுகளில் விரல்களை வைத்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கண்களைச் சுற்றி கருப்பு துணியை கடிக்கொண்டதன் மூலம், இந்த அரசாங்கம் உண்மையில் பார்வையற்றது என்பதையும், என்ன நடக்கிறது என்பதில் காவல்துறையினர் பார்வையற்றவர்களாக இருந்தனர் என்பதையும், இந்த அரசாங்கம் அமைதியாக இருப்பதைக் காட்டுவதற்காக நாங்கள் உதடுகளில் விரல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். 

"மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடியும், தனது துறைச்சாராத எல்லாவற்றையும் பற்றி பேசி வரும்  உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தில்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் குறித்து தொடர்ந்து மவனம் காத்து வருகின்றனர். இது தேசம் மற்றும் சர்வதேச அளவில் வெட்கக்கேடான விஷயம்"என்று மஹுவா மொய்த்ரா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com