பெட்ரோல் விலையில் 17 பைசாவும், டீசல் விலையில் 16 பைசாவும் திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலைக் குறைப்பை செய்துள்ளன.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்துள்ளன.
அதன்படி, கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக்குத் தகுந்தவாறு எரிபொருள்களின் விலையைக் குறைத்திருந்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்னும் அதிகமாகக் குறைந்திருக்கும்.
எனினும், அந்த எரிபொருள்களின் உற்பத்தி வரியை சனிக்கிழமை முதல் லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. சிறிதளவில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிப்பில், ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்த்து திங்கள்கிழமையும் (மார்ச் 16) விற்பனையாகிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 17 பைசாவும், டீசல் லிட்டருக்கு 16 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 65.71 ஆகவும் விற்பனையாகிறது.