ராணிப்பேட்டை அருகே வழி தவறி தண்ணீர் தேடி வந்த பெண்மான் தடுப்பு கம்பியில் மோதி உயிரிழந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்னு கிராமம் பாலாற்றங்கரை அருகே வழி தவறி தண்ணீர் தேடி வந்த 2 வயது மதிக்கத்தக்க பெண்மான் விவசாய நிலத்தை சுற்றி போடப்பட்ட தடுப்பு கம்பியின் மீது மோதியதில் உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு சரக வனத்துறையினர் உயிரிழந்த மானின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.